(என் கவிதையெனும் திரைக்கதைக்கு கதாநாயகி நீதானடி !!!)
ஐவிரு மாஷம் சுமந்து பெற்றால் மட்டுமல்ல
ஓரிரு வினாடிகள் மனதில் சுமந்து பெற்றெடுப்பது கூட சிசுதான்.......
என்கவிதைகளைத்தான் சிசு என்று சொல்கிறேன்
அதிலும் அக்குழந்தை எனக்குப் பிறந்த குழந்தை என்பதை விட
நமக்குப் பிறந்த குழந்தை என்றுதான் சொல்ல விரும்புகிறேன்.
அதெப்படி நம் குழந்தை ஆகும்???
என்று நீ கேட்கக்கூடும்......
ஆணும் பெண்ணும் உடலளவில் ஒன்றித்துப் பிறப்பது
உணர்வும் உருவமும் உடைய குழந்தை - ஆனால்
உன்னோடு என் நினைவுகள் நிலவுவதால்
உணர்வை மட்டும் கொண்ட கவிதையெனும் குழந்தை பிறக்குதடி சகியே!!!
உயிருள்ள சிசுக்கு காரணம் யார் என்று
தாய் சொன்னால்தான் தந்தை யாரென்று தெரியும்
என் கவிக்குழந்தைக்கு தந்தை சொன்னால்தான்
இக்குழந்தைக்கு தாய் நீ என்று தெரியவரும்
கருவை சுமப்பதால் பெண் தாயாகிறாள்
உன்னையும் உன் உணர்வுகளையும்
நினைவுகளையும் சுமப்பதால்
நான் எல்லாமும் ஆகிறேன்.








































