Wednesday, December 21, 2011

என் கவிதைக்கு தாய் நீதானடி !!!


(என் கவிதையெனும் திரைக்கதைக்கு கதாநாயகி நீதானடி !!!)

ஐவிரு மாஷம் சுமந்து பெற்றால் மட்டுமல்ல
ஓரிரு வினாடிகள் மனதில் சுமந்து பெற்றெடுப்பது கூட சிசுதான்.......
என்கவிதைகளைத்தான் சிசு என்று சொல்கிறேன்
அதிலும் அக்குழந்தை எனக்குப் பிறந்த குழந்தை என்பதை விட
நமக்குப் பிறந்த குழந்தை என்றுதான் சொல்ல விரும்புகிறேன்.

அதெப்படி நம் குழந்தை ஆகும்???
என்று நீ கேட்கக்கூடும்......

ஆணும் பெண்ணும் உடலளவில் ஒன்றித்துப் பிறப்பது
உணர்வும் உருவமும் உடைய குழந்தை - ஆனால்
உன்னோடு என் நினைவுகள் நிலவுவதால்
உணர்வை மட்டும் கொண்ட கவிதையெனும் குழந்தை பிறக்குதடி சகியே!!!

உயிருள்ள சிசுக்கு காரணம் யார் என்று
தாய் சொன்னால்தான் தந்தை யாரென்று தெரியும்
என் கவிக்குழந்தைக்கு தந்தை சொன்னால்தான்
இக்குழந்தைக்கு தாய் நீ என்று தெரியவரும்

கருவை சுமப்பதால்  பெண்  தாயாகிறாள்
உன்னையும் உன் உணர்வுகளையும்
நினைவுகளையும் சுமப்பதால்
நான் எல்லாமும் ஆகிறேன்.

Sunday, December 4, 2011

காலம் பதில் சொல்லுமா???


புல்லாங்குழல் இசைப்பவனின்
இசையை ரசிக்கும் ரசிகர் மத்தியில்
அவன் உதட்டுக் காயத்துக்காய்
கண்ணீர் கசிந்த சிந்து நான்.....

இன்று என் இதயக்காயத்துக்காய்
மௌனமாய் கண்மூடி அழுகிறேன்
மழையில் நனைந்தபடி காரணம் இன்றி
காலம் பதில் சொல்லுமா???


காதல் ஏழை.....


ஹைக்கூவில் குபேரனாக
இருக்கலாம் இவன் - ஆனால்
காதலில் மாபெரும் ஏழைதான்
மழையையும் மண்ணையும் நம்பி
வியசாயி விதைப்பதைப் போல் - இவன்
அவளையும் அவள்மீதுள்ள பாசத்தையும்
நம்மி காதலை விதைத்தான்
கடைசி வரைக்கும் விழைச்சல் கிடக்கவில்லையே!!!
கவிதைக்காக மட்டும் தலை குனிந்த என் பேனா
முதல் முறை உன்னிடம் தலை குனிந்து கேட்கிறது
இந்த  காதல் ஏழைக்கு பிச்சையிடு என்று.....

புரியாத புதிரே???


புதிதாய் பூத்த மலராய்
புரிந்தாய் ஒரு புன்னகை
புரிந்த அந்த புன்னகையால்
புதை மணலாய் புதைந்தேனே.....
புரட்டிய என் புஷ்த்தகத்தின் ஒவ்வொரு பக்கத்திலும்
புனிதமான உன் கால் தடங்கள்.....
புல்லாங்குழல் காற்றைப்போல் - உன்
புருவத்தின் அபிநயம் கண்டு
புட்டுக்கிச்சி என் வாய் வார்த்தைகள்.....
புலராத என் காலைப்பொழுதில்
புதுமை செய்தது உன் கைவிரல் கோலங்கள - உன்
புன்னகை தேசத்தில்
புத்தராய் நான் சகலமும் திறந்தேன்
புரியாத புதிரே என்றும் நீ எனக்கு!!!

Tuesday, November 22, 2011

உடையாத பேனா முனை !!!


பேனாவின் உருவாக்கத்தின்
உண்மையை உணர்ந்தேன் - மானிடா
காதல் தோல்வியால் கண்ணீர் வற்றியதால்
வார்த்தை கிறுக்கத்தானோ என்று!!!

எத்தனை கிறுக்கல்கள் மைதீரும் வரை தீர்ந்த பின்
என் உதிரத்தை மையாக்கி - நான்
எழுதிய என் காதல் கடிதங்களுக்கு
உன் உதடுகலால் முத்திரை இடுவாய் என்று நினைத்தேன் நீயோ உன் பாதணியால் பதம் பார்த்தாய் என் கன்னத்தை!!!

மரண தண்டனையின் பின் தீர்ப்பெழுதிய
பேனா முனைகளை உடைக்கலாம்
ஆனால் என் காதலுக்கு நீ
மரண தண்டனை விதித்த போதும்
என் பேனா முனைகளை உடைத்தெறிய
மனம் மறுக்கிறது ஏன்???
உனைப் பற்றி கவியெழுதிய முனையே அதனாளோ ???


Thursday, November 17, 2011

பூமிக்கு ஈடு நீதானடி!!!


ஆதவனும் அதன் சூழ் கோல்களும் 
கருந்துழை நோக்கி நகர்கிறது 
இது விஞ்ஞானம் சொன்னது 
ஆனால் நானும் என்மனமும் 
உனை நோக்கியே நகர்கிறோம் பெண்ணே 


பூமிபோல் உன்னுள்ளும் 
தினம்தினம் எத்தனை மாற்றங்கள் 
எத்தனை கவர்ச்சிகள் உன்னில் 
ஆனாலும் உனை சுற்றி சுற்றி ரசிக்கும் 
நிலா நான்தானடி பெண்ணே 
இதனால் பூமிக்கு ஈடு நீதானடி!!!





என்னவளைப் பற்றி உங்களிடம் !!!


அவளைப் படைத்த பிரமன் என்னையும் 
படைத்ததுக்கு அர்த்தம் இல்லாமலா போயிடும் 
என்று எனக்குள்ளே ஒரு புன்முறுவல் 
அவளை பார்க்கும் போதெல்லாம்.....

அவளின் சிறு சிரிப்பு அது எனக்கு அடைமழை 
அவளின் கோபம் நான் ரசித்த வெள்ளித்திரை 
அக்கோபத்தில் அவளின் கண்கள் 
அட டட டா வார்த்தையே இல்லை.....

மெல்லிடை அசைத்து என் மனம் பறித்து 
அசைந்தோடும் நைல்நதி 
அவள் கைவிரல் அட அதில் 
பேனாவாக எனக்கும் ஆசைதான்.....

அவளின் ஒற்றைப் பின்னல் ஜடை 
என் கண்களுக்கு கிடைத்த கொடை
அவள் கண் சிமிட்டலில் ஆயிரம் 
ரங்கோலி என் நெஞ்சிக்குள்ளே.....

உன் வீட்டு முற்றத்தில் மாங்காய் திருடிய எனக்கு 
உன் மனதை திருட முடியளையடி
முன்பு பைக்ல் ஏறி உன் வீடு கடந்து சென்றேன் 
இப்போது மோட்ட பைக்ல் ஏறி சுற்றுகிறேன் உன் திருமுகம் காண.....

இருந்தும்  நீயோ இத்துணுண்டு கூட 
திரும்ப மாட்டேங்கிற 
பெற்றல் விலை ஏறுதே தவிர 
உன் மனதில் என் நினைப்பு ஏறமாட்டேங்குது.....

அவள் கைகளால் ஆலகால விஷம் கொடுத்தால் கூட 
வாங்கத் துடிக்கும் என் கரங்கள் 
அவள் நெற்றியில் பொட்டு இருக்கோ இல்லையோ 
அனால் விபூதி இருந்தே தீரும்.....

இவ்வளவு உணர்ந்தேன் அவளைப் பற்றி ஆனால் 
அவளுக்கு தெரிந்ததோ என் பெயர் மட்டும்தான்
இருந்தும் ஆடம்பரம் பிடிக்காத 
அழகிய தேவதை என்னவள்!!! 





Sunday, October 16, 2011

ஏமாற்றம் மட்டுமே !!!


நேற்று பௌர்ணமி தேடியலைந்த என் கண்களுக்கு 
இன்று கிடைத்தது வெறும் மூன்றாம் பிறை மட்டுமே !!! 
நேற்று நான் செலுத்திய என் காதல் விண்களம்
இன்று தரை சேர்ந்தது வெறும் சாம்பலாய் !!!


நேற்று நான் சேர்த்து வைத்த உன் சிரிப்பொலியின் ஓசை
இன்று கேட்கிறது என்தன் விம்மல் அழுகுரலாய் !!!
நேற்று நான் அனுப்பிய என் காதல் காகிதங்களுக்கு 
இன்று பதில் வந்தது என் மரணப் பத்திரிக்கையாய் !!!


நேற்று என்னுல் நடத்திய காதல் வேள்வில் எரிந்த சுடர் 
இன்றும் சுடர் விட்டு எரிகிறது என் மரணப் படுக்கைக்கு முன் விளக்காய் !!!  
நேற்று நான் அனுப்பிய ரோஜா மலர்கள் 
இன்று வந்தது என் கல்லறை மேல் மலர் வலையங்களாய் !!!


நேற்று நான் நட்ட முல்லைச் செடி 
இன்று துளிர்த்தது முட்கள் நிறைந்த கள்ளிச்செடியாய் !!!
நேற்று செய்த அனைத்துக்கும் பதில் 
இன்று வெறும் ஏமாற்றம் மட்டுமே !!!




Monday, September 26, 2011

காதல் கணக்கு ++

நானாக இருந்த என்னை உனைக்குறித்து வகையிட்டு 
நீயாக மாற்றியவள் நீதானடி 
ஒரு வட்டமாக இருந்த எனக்கு 
தொடலிபோல் ஒரு பரிசம் காட்டி சென்றவள் நீதானடி!!! 


வெறும் தொகையீடாக தொலைந்த என்னை 
உன் மின்னல் விழிப்பார்வையால் வரையறுத்து அடையாளம் காட்டினாயடி 
சீரான கதியில் சென்ற என் எண்ணங்களை 
ஆர்முடுக்கியவளும் நீதானடி!!! 


நேராக இருந்த என் தன்னம்பிக்கையை 
மறை திசை நோக்கி நகரச் சொய்தவள் நீதானடி 
ஒற்றை வலுப்பின்னமாக இருந்த என் இதயத்தில் - இன்று 
உன் நினைவுகள் சேர்ந்ததால் கலப்புப் பின்னமாக தவிக்கிறது பெண்ணே!!!


மெய் எண்ணாக சிமிட்டிய என் கண்கள் 
இப்பொழுது சிக்கலெண்ணாக கண்ணீர் சிந்துகிறது 
இந்த என் காதல் கணக்குக்கு செய்முறையும்
தீர்வும் உன் காதல்தானடி பெண்ணே!!! 


காத்திருக்கிறான் உன்தன் சிந்து 
கிடக்கிறதோ இவன் மனமோ நொந்து 
தயங்காமல் என் முன் உன் வரவு வந்து 
உன் மொழியால் காதல் அனுமதி தந்து 
பின் பாடுவோம் ஒரு காதல் சிந்து!!!


























பின் குறிப்பு : 


01. என் கவி வாசகர்களுக்கான அன்பான வேண்டுகோள் வெருமனே வாசிக்காமல் உங்கள் கருத்துக்களையும் பதிவுபன்னுங்கள். 

02. வாசகர்களுக்கான தயவான வேண்டுகோள் இந்த கிறுக்கள் பகுதியில் இணைந்து கொள்ள செய்யவேண்டியது. 
  • Join this site ஐ Click செய்க.
  • பின் உங்கள் Mail account ஐ தெரிவு செய்க. 
  • பின் உங்கள் மெயில் ID ஐ யும் password ஐயும் Type செய்து,
  • பின் done ஐ Click செய்யவும். 

Tuesday, September 20, 2011

பெண்கள் நடாத்தும் தீவிரவாதம் !!!

காதல் எனும் போர்க்களத்தில் 
ஆசை எனும் கன்னி வெடிகளை அவன் மனதில் புதைத்து
ஆண்களை பனையக்கைதியாக்கி
பெண்கள் நடாத்தும் தீவிரவாதம்தான் இந்த காத
ல்.







காதல் ஆரம்பம் !!!

நல்லதை தொடங்கமுன் பிள்ளையார்சுழியிட்டு தொடங்கு
வெற்றியில் முடியும் என்றார்கள்...
நானும் தொடங்கினேன் உன்னைக் காதலிக்க
நீயோ நான் வரைந்த சுழிக்கு பக்கத்தில் 
முற்றுப்புள்ளியிட்டு செல்கிறாயே இது ஞாயமாடி???







பாழாய்ப் போன காதல் !!!

நாம் ஒருவரையொருவர் சந்திக்கமுதல் 
வெறும் சமாந்தரக்கோடுகள்தான் - ஆனால் 
சந்தித்த பின்பு குத்தெதிர் கோணமாய் 
உருவானது இந்த பாழாய்ப் போன காதல் !!!

இதயவறையிலும் நீதான்!!!

என் நான்கு இதயவறைசுவர்களும் 
உன் புகைப் படம் தாங்கிறது
ஏன் தெரியுமா வேறுயாரும் 

குடிவந்திரக்கூடாது ன்பதற்கே.........

நான் என்னை வெறுத்தேன் !!!

நான் உன்னை பார்த்த பின்பு மலர்களையே வெறுத்தேன்
நடனமிடும் மயிலையும் வெறுத்தேன்
நீ என்னை வெறுத்த பிறகு கண்ணாடி பார்ப்பதையே மறந்தேன்

என்னை நானே வெறுத்தேன் !!!

காதல் வலி !!!

பூவுக்கு வலிக்குமென நினைத்திருந்தால்
பூஜைக்கேது பூ...
உன் மனதுக்கு வலிக்குமென நினைத்திருந்தால்
எனக்கிங்கு காதலேது !!!


சுமையால் பிரிவு !!!

மரத்துக்கு சுமையாக இருக்க விரும்பாத மலர்
தானாக உதிர்வதைப் போல்
நானும் உனைப் பிரிய ஆசைப் படுகிறேன் பெண்ணே!!!


Monday, September 19, 2011

காதலின் எதிர்ப்பு சேனா !!!

உன் நிழலாய் வாழநினைத்தேன்
இருளைக் கொண்டு வந்தாய்...
சூரியகாந்தி பூவாக மலரநினைத்தேன்
சூரியனாய் உதிக்க மறுத்தாய்...
உனக்காக உயிர்வாழ நினைத்தேன்
ஒட்ஷிஜனை தர மறுத்தாய்...


உன்னிடம் காதலை சொல்ல நினைத்தேன்
வார்த்தைகளை மறக்கச் செய்தாய்...
இப்படி எல்லாவற்றுக்கும்
எதிர்ப்பு சேனாவாய் இருப்பதேனடி???
இனி என் கல்லறையிலாவது ஒரு துளி கண்ணீர் விடுவாயா
என் ஆத்மாவாவது சாந்திபெற !!!


காதல் சுகந்திரம் !!!

இந்தியக் கொடியின் மத்தியில் 
இருக்கும் தர்மச்சக்கரம் போல்
எனது மனதின் நடுவே இருந்து
தினம் தினம் வன்முறை செய்யாதேடி மடந்தையே!!!
எனக்கும் காதல் சுகந்திரம் கொடுத்துவிடு
உன் நினைவுகளை சுமந்தபடியே 

வாழ்கிறேன் தனிமையில் .......

காதல் சிலுவை !!!

சிலுவை சுமந்த தேவனுக்கோ முட்களினால் 
நெற்றியைக்கட்டி சிலுவையில் அறைந்தார்கள்
ஆனால் உன் காதலை என் இதயத்தில் சுமக்கும் -  எனக்கு 

மௌனமெனும் முட்களினால் இதயத்தையே கட்டி 
காதல் சிலுவையில் அறைந்தாயேடி பெண்ணே
உன்னை விட அந்த யூதர்கள் எவ்வளவோ மேல
டி !!!

காதல் யூதாஷ் நீதானடி!!!

என்னுல் ஒழிந்திருந்த காதலை அடையாளம் காட்டியதால்
நீ கூட யூதாஷ்தானடி சகியே !!!


காதலின் மௌனம்!!!

இருந்தும் இல்லையென்றது சொந்தம்
இல்லாமல் உண்டு என்றது நட்பு
பாவம் இந்த காதல் மட்டும் ஏன் மௌனமாக இருக்கிறது.....


உயிர்கொடுத்தவளே !!!

என் உறங்கிக்கொண்டிருந்த பேனாக்கு 
கவிவரைய உயிர்கொடுத்தவளே
அதன் மை தீர்ந்தாலும் 

நான் உன்மீது கொண்ட லவ் தீராதடி.......

நானும் இப்போது கவிஞன் !!!

எனக்கும் கவிதைக்கும் சம்மந்தமில்லையடி உன்னைக் காணுமுன்
நானும் இப்போது கவிஞன் உனைக்கண்ட பின் !!!


காதலின் பின் கல்லூரி !!!

உன் வருகைக்காக காத்திருந்ததால்
என் வருகை குறைந்தது
கல்லூரி பதிவேட்டில்
சீக்கிரம் வந்துவிடு நான் 

செல்ல வேண்டும் கல்லூரிக்கு......

பேருந்தில் காதல் !!!

பெண்ணே நீ என்மீது கொண்ட காதல்
பேருந்துப் பயணம் போல்லாகுதடி...... 

இப்போது வேரொருவனை 
உன்மனதில் சுமந்து செல்வதால்!!!

காதல் நாத்திகவாதி !!!

நீ என்னைத் தாண்டிச் செல்லும் போதும்
உனைப்பார்க அடம்பிடிக்கும் என்
கண்களுக்கு எப்படி சொல்வேன்
நீ ஒரு காதல் நாத்தி
வாதியென்று !!!

கனவும் நனவும் !!!

நனவு வாழ்வில் நீ என் கனவாக இருந்தாலும்
கனவில் நீதான் என் வாழ்க்கையாக இருக்கிறாய்
இதனால்தானோ என்னவோ நான் இப்போது
அதிகம் தூங்குகிறேன் 
கனவில் உனைக்கான !!!





Wednesday, August 3, 2011

சிந்துவின் சொல்ல மறந்த காதல் !!! (plz feel my luv)


காதல் !!!
இது என்னைப்போன்றவர்களுக்கு
வெறும் சொப்பணமாகவே ஆகிவிட்டது - ஆனால்
பல முறை சொல்லியிருக்கிறேன் கனவில் என் காதலை - இருந்தும்
நிஜத்தில் அது வெறும் கனவாகவே கலைந்து விட்டது.

கல்லூரியில் உனைப் பார்க்கும் ஒவ்வொரு வினாடியும்
நினைப்பேன் இவள்தான் என்னவளா என்று.
நாம் பேசியதில்லை வார்த்தைகளால் - ஆனால்
என் கண்களால் பேசியிருக்கிறேன் பலமுறை
இருந்தும் உன் பதிலோ மௌனம் மட்டுமே.
அப்போதெல்லாம் இவள் எனக்கேற்றவள் இல்லையா???
இவளை நான் எந்த விதத்தும் இம்பிரஷ் பன்னலயா???
என்று எனக்குள்ளே பல கேள்விகள்
இன்னும்கூட பதில் தெரியாத கேள்விகளே அவைகள்.....

உன் பெயரில் உள்ள ஐந்து எழுத்துக்களாலும்
என் ஐம் புலங்களையும் அடக்கியவளே
இக்கவிதை பூவை முகரும் போதாவது உணர்வாய்
இப்படி என்னையொருவன் காதலித்திருக்கிறான் என்று.....

இது வெறும் கவிதை என்று மட்டும் நினைக்காதே
என் ஒருதலைக் காதல் காவியத்தில் எஞ்சிய ஒரு இதழ்
இக்காவியத்தை இத்துடன் நிறைவு செய்யவா
தொடரவா பதில் உன்னிடமே !!!!!

என்காதல் மட்டும் சற்று விதிவிலக்குங்க
வார்த்தைகளேயில்லை, மெஷ்ஷேஜ்
போன் ஹோல்ஷில்லை, சந்திப்பில்லை
சடுகுடுவில்லை, சில்மிஷமில்லை, கடிதமில்லை - ஆனால்
நீங்கள் கேட்கலாம் இப்படி எதுவுமே இல்லை இது காதலா என்று
எனக்கும் புரியாமல்தான் இருக்கிறது
இருந்தாலும் இது காதல்தான் எனக்கு
இக் கவிதைதான் முதலும் இறுதியுமான
என் காதல் காகிதம்.

உனக்கு தெரியாமலே உனை காதலிக்கிறன்
உன்னை நேசிக்கிறேன்
உன் மூச்சி காற்றையே சுவாசிக்கிறேன்
அதிலும் ஒரு சுகந்தான் - எனக்கு
நீயும் என்னைக் காதலிக்க வேண்டும் என்று கேட்கவில்லை "just feel my luv"

இன்று நீ எங்கோ நான் எங்கோ
தூரத்தினால் பிரிந்திருக்கிறேன் நினைவினால் அல்ல
என் காதலை நேரடியாக சொல்லமறந்தாலும்
இக்கவிமூலம் சொல்ல நினைக்கிறேன் உணர்ந்தால் பதில்போடு
இல்லையென்றால் உன் திருமணப்பத்திரிக்கையையாவது கொடுத்து விடு
நானும் வந்து அர்ச்சனை தூவி வாழ்த்துகிறேன்
நீ பல்லாண்டு வாழ !!!

Sunday, May 29, 2011

என்னுள் ஒரு கேள்வி ???


கண்பார்த்துக் காதல் அது பழசு 
கை பட்டுக் காதல் தினிசு 
மனம் பார்த்துக் காதல் புதுசு
காதல் இதை சொல்ல ஏழு ஜெம்மம் தேவை 
சொன்னால் கோடி இன்பம் கிள்ளும் 
அப்படி என்னதான் இருக்கிறது
இந்தக் காதலில் என்று என்னுல் ஒரு கேள்வி???


காதலித்துப் பார் சொர்க்கமும் நரகமும் 
இங்கேயே நிச்சயம் என்று சொன்ன 
கவியரசு கூட சற்று சிந்திக்கிறார் இப்போது
காதலில் சொக்கம் மட்டுமே உள்ளது
அடடா தவரான ஒரு கவிவரியை மொழிந்ததற்கு 
காதலில் விழுந்தவர்களுக்கு 
காதல் உயிரைவிட மேன்மை யானதா 
இதனால்தானோ என்னவோ தற்கொலைகூட தூசாகிவிட்டது 
இதெல்லாம் எப்படியென்று என்னுள் ஒரு கேள்வி???

தர மறுப்பதும் பின் தலை கொடுப்பதும் 
அடம்பிடிப்பதும் பின் மனம் பிடிப்பதும் 
சின்னச் சண்டை பெரிய முத்தம் 
ஒரு துளிக் கண்ணீர் பலதுளி ஆனந்தக்கண்ணீர் 
என்று ஏராளமான சில்மிஷம்
காதலில் மட்டுமே சாத்தியமா என்று என்னுள் ஒரு கேள்வி???

அவளின் அழகான புன்னகையில் 
அழமான தன்நம்பிக்கை 
அவளின் சிறு கண்சிமிட்டலில் 
ஆயிரம் முடிவுகள் 
அவளின் சிறு கன்னக்குழியில் 
என் என்னங்கள் வந்து நிறைய 
பல வண்ணங்கள் மாற 
இப்படிப் பட்ட ஒருத்தியை 
நானும் பார்ப்பேனா 
அவள் விரல் கோர்ப்பேனா 
என் காதல்சிலையை அவள் மனதில் வார்ப்பேனா 
என்று என்னுள் ஒரு கேள்வி???

Sunday, May 22, 2011

உன் ஒற்றை விழிப்பார்வையால் !!!

உன்கண்களுக்குப் பயந்து
ஒஷாமா போல் பதுங்கியிருந்த என்னை
உன் ஒற்றை விழிப்பார்வையால்
சுட்டு வீழ்த்தி கொன்றாயடி பெண்ணே!!!
இதுதான் காதல் கொலையா???

நீயோ சித்தி எய்தினாய் நானோ புத்தி மங்கினேன் !!!

நீ விரல் தொட்டுப் படித்துத் தந்த
புஷ்தகத்தில் நானும் படித்தேன்
உன் கை ரேகை அடையாளங்களை மட்டும்
நீயோ சித்தி எய்தினாய்
நானோ புத்தி மங்கினேன் !!!

பதில் சொல்லடி !!!

இரவுவானுக்கு சந்திரனும் நட்சத்திரமும்
தமிழுக்கு இலக்கணமும் இலக்கியமும்
கவிதைக்கு எதுகையும் மோனையும்
பார்வைக்கு விழியும் ஒளியும்
அழகாகத்தெரியும் போது
உனக்கு மட்டும் ஏன் நானும் என் காதலும்
அழகாகத் தெரிய வில்லை
பெண்ணே பதில் சொல்லடி!!!



இதயத்துடிப்பின் ஓசை !!!

என் இதயம் இப்போது உன் பெயர் சொல்லி துடிக்கிதடி சகியே......
இதயத்துடிப்பின் ஓசையை மாற்றத் தெரிந்த - உனக்கு 
உன் மனதை மட்டும் மாற்ற முடியலயாடி???

Saturday, May 7, 2011

முதற்தோழி நீதான் அம்மா !!!

என்னை எனக்கு உணர்த்திய
என் முதற்தோழி நீதான் அம்மா.....
துயரம் சூழ்கையில் நான் முகம் புதைத்து
கண்ணீர் சிந்துவது உன் மடி தானம்மா!!!

அம்மா உன் வலியால்......

உன் வலியால் பிறந்ததனால் என்னவோ
வலி பிறக்கும் போதெல்லாம் உன்னையே
அழைக்கின்றேன் “அம்மா ” என்று !!!

Sunday, April 17, 2011

தெய்வம் தந்த தெய்வம்.....!!!

எவ்வளவோ கவிதை எழுதிய இந்த அடியேனுக்கு
அம்மா உன்னைப் பற்றி கவிவடிக்க மட்டும்
வார்த்தைகளே வரவில்லையே - ஏன்???

உன் அன்பு, பாசம், நேசத்தை உவமிக்க
தமிழ் அகராதியில் கூட வார்த்தைகள் யில்லையாம்மா !!!
அம்மா உன் அரவனைப்புக்கு முன் அனைத்துமே போலிதானம்மா.

அம்மாவின் அன்பு மட்டு மெய்
மயக்கிடும் யாவும் பொய் மனதினில் வைய்.
அம்மா உன் பாசம் மெய்
பொசிக்கிடும் ஆசை தீ அனைந்திட செய்.

அம்மா உன் மடியில் தவழ்ந்ததும்
உன் விரல் கோர்த்து நடந்த நாட்கள்
என் முன்னே கண்ணாடியில் உருபெருத்த விம்பமாய் .....

என் மழழைக்கதைகேட்டு நீ புரிந்த புன்னை
அது அழியாப் புகைப்படம் அம்மா!!!
இன்னும் எத்தனை ஜெம்மம் எடுத்தாலும்
எனக்கு வேண்டும் அம்மாவாய் -நீ

அம்மா உன் அன்னப தினம்  தினம் பெற ஏங்கும் மகன் சிந்து!!!

Friday, March 25, 2011

பெப்ரவரி போர்ட்டீன்...!!!

சுவாசமில்லாமல் உயிர்யில்லை
சுரம் இல்லாமல் ராகமும் இல்லை

நீலமில்லாமல் வானமும் இல்லை
நீ இல்லாமல் நானுமே இல்லை

பகல் கனவில் உன் நினைவுகள்
பதராமல் தூங்கிக் கொண்டிருக்கிறது

எழுந்து விட்ட என் வேலை
எழுதிக் கொண்டது விடுமுறை

திங்களுக்குள் தித்திக்கும் திங்களிது
தினம்மாறலாம் கிழமை மாறாது

உன் உருவம் ஒன்று வரைந்தேன்- அதற்கு
உயிர் தருமா பெப்ரவரி14

உன் பதிலுக்காக செம்மஞ்சள் உடைதனில்- நான்
உன் வரவு வந்து பதில் தருமா?

Monday, March 21, 2011

கண்டுகொண்டேன்! கண்டுகொண்டேன்!

மின்னலை ரசித்தால் அது என் கண்ணுக்கு ஆபத்தென்பதை உன் கண்களைக் கண்டதும்தான் கண்டுகொண்டேன்.....

உன் புன்னகையை ரசித்ததால்தான் என் தூக்கத்துக்கு ஆபத்தென்பதை கண்டுகொண்டேன்.....

உன்னைப் பார்த்தபின்புதான் கம்பன் எழுதமறந்த கவிதையும் இருக்கிறது என்பதைக் கண்டுகொண்டேன்.....

உன் குரலைக்கேட்ட பின்புதான் தவரவிடப்பட்ட ஸ்வரமொன்று இருப்பதை உணர்ந்து கொண்டேன்.....

உன் கண்களின் ஈர்ப்பு விசைக்கு விதியெழுத முடியாதென்பதால்தான் நியுட்டன் இப்போது இல்லையென்பதை கண்டுகொண்டேன்...!!!

Saturday, March 19, 2011

சுப்பர் பௌர்ணமி !!!

விஞ்ஞானம் உணர மறுத்த உண்மையிது
நிலவிடம் கூறினேன் உன்னைவிட பிரகாஷமான
அழகான ஒருத்தி பூமியில் உள்ளாள் என்றேன்........!!!
எங்கே காட்டு பார்ப்பம் என்று கூறி
உன்முகம்கான அருகில் வருகுதடி நிலா
ஆனால் நானோ இரு நிலவுகளின்
பிரகாஷத்தால் பார்வையிழந்து தவிக்கிறேன்.......!!!

Friday, March 18, 2011

மன்னிப்புப் பூக்களை காணிக்கை யாக்கமாட்டாயா ???

எவ்வளவோ பாவங்கள் செய்தவர்களுக்கே பாவமன்னிப்பு கொடுக்கும் காலமிது -ஆனால்
நான் செய்ததும் குறும்புத்தனமான சிறு தவறுதான் நான் அதை மறுக்கவில்லை.....

அந்த குறும்பு வார்த்தை உன் மனதை இரும்பாக தாக்குமென நினைக்கவில்லை இந்தப் பாவி.....
ஆனால் இன்று உணர்கிறேன்.....

மன்னிப்பு என்பதை பிறர் நமக்கு கொடுப்பதைவிட
நாம் பிறர்க்கு கொடுப்பதே சிறந்தது என்பார்கள்.....
அதை கூட நீ எனக்கு தரமாட்டாயா???

நேற்று உன்கைகளை முட்களால் காயப்படுத்திய ரோஜா
இன்று கண்ணீர் விட்டு அழுகிறது பனித்துளியாக.....
மன்னிக்கமாட்டாயா என்று!!!

இன்று கண்ணீர் கோடுகள் நீண்டு கொண்டு செல்கிறது என் கன்னத்தில்
உன் ஒரு வார்த்தையால் தடுத்து நிறுத்தமாட்டாயா தோ(ழனே)/ (ழியே)?????

என் ஏக்க மூச்சை, என் கண்ணீர் துளிகளை, என் விம்மல் வெடிப்புக்களை, மௌன ராகங்களை மன்னிப்பாய் ஏற்று
மீண்டும் உன் நண்பனாக அங்கிகரிப்பாயா?????

மன்னிப்புப் பூக்களை காணிக்கையாக்கமாட்டாயா????
காத்திருக்கிறேன் உன் பதிலுக்காக என்றும்
அன்பு நண்பன் சிந்துஜன்.....

நண்பேண்டா !!!

விளக்காய் விழித்திருக்க உன் வீட்டு வாச்மேனுமல்ல....
வசதியுள்ளவரை மட்டும் பழக உன் உறவினருமல்ல....
புரியும் வரை கற்பிக்க உன் ஆசானுமல்ல....

பர்சில் பணமிருக்கும் வரை மட்டும் பழக உன் காதலியுமல்ல....
கல்யாணம் வரை மட்டுமிருக்கும் காதலுமல்ல....
உயிருள்ள வரை நிழலாய் தொடரும் உன் நண்பேண்டா நான்!!!




Monday, March 7, 2011

காதல் வாடகை!!!

பெண்ணே என்னைப்பிடிக்கவில்லையென்றால்
இவ்வளவு நாட்களும் என் இதயவறையில்
தங்கி இருந்ததற்கு வாடகையை தந்துவிட்டு செல்லடி....