Friday, March 25, 2011

பெப்ரவரி போர்ட்டீன்...!!!

சுவாசமில்லாமல் உயிர்யில்லை
சுரம் இல்லாமல் ராகமும் இல்லை

நீலமில்லாமல் வானமும் இல்லை
நீ இல்லாமல் நானுமே இல்லை

பகல் கனவில் உன் நினைவுகள்
பதராமல் தூங்கிக் கொண்டிருக்கிறது

எழுந்து விட்ட என் வேலை
எழுதிக் கொண்டது விடுமுறை

திங்களுக்குள் தித்திக்கும் திங்களிது
தினம்மாறலாம் கிழமை மாறாது

உன் உருவம் ஒன்று வரைந்தேன்- அதற்கு
உயிர் தருமா பெப்ரவரி14

உன் பதிலுக்காக செம்மஞ்சள் உடைதனில்- நான்
உன் வரவு வந்து பதில் தருமா?

No comments:

Post a Comment