Monday, September 26, 2011

காதல் கணக்கு ++

நானாக இருந்த என்னை உனைக்குறித்து வகையிட்டு 
நீயாக மாற்றியவள் நீதானடி 
ஒரு வட்டமாக இருந்த எனக்கு 
தொடலிபோல் ஒரு பரிசம் காட்டி சென்றவள் நீதானடி!!! 


வெறும் தொகையீடாக தொலைந்த என்னை 
உன் மின்னல் விழிப்பார்வையால் வரையறுத்து அடையாளம் காட்டினாயடி 
சீரான கதியில் சென்ற என் எண்ணங்களை 
ஆர்முடுக்கியவளும் நீதானடி!!! 


நேராக இருந்த என் தன்னம்பிக்கையை 
மறை திசை நோக்கி நகரச் சொய்தவள் நீதானடி 
ஒற்றை வலுப்பின்னமாக இருந்த என் இதயத்தில் - இன்று 
உன் நினைவுகள் சேர்ந்ததால் கலப்புப் பின்னமாக தவிக்கிறது பெண்ணே!!!


மெய் எண்ணாக சிமிட்டிய என் கண்கள் 
இப்பொழுது சிக்கலெண்ணாக கண்ணீர் சிந்துகிறது 
இந்த என் காதல் கணக்குக்கு செய்முறையும்
தீர்வும் உன் காதல்தானடி பெண்ணே!!! 


காத்திருக்கிறான் உன்தன் சிந்து 
கிடக்கிறதோ இவன் மனமோ நொந்து 
தயங்காமல் என் முன் உன் வரவு வந்து 
உன் மொழியால் காதல் அனுமதி தந்து 
பின் பாடுவோம் ஒரு காதல் சிந்து!!!


























பின் குறிப்பு : 


01. என் கவி வாசகர்களுக்கான அன்பான வேண்டுகோள் வெருமனே வாசிக்காமல் உங்கள் கருத்துக்களையும் பதிவுபன்னுங்கள். 

02. வாசகர்களுக்கான தயவான வேண்டுகோள் இந்த கிறுக்கள் பகுதியில் இணைந்து கொள்ள செய்யவேண்டியது. 
  • Join this site ஐ Click செய்க.
  • பின் உங்கள் Mail account ஐ தெரிவு செய்க. 
  • பின் உங்கள் மெயில் ID ஐ யும் password ஐயும் Type செய்து,
  • பின் done ஐ Click செய்யவும். 

Tuesday, September 20, 2011

பெண்கள் நடாத்தும் தீவிரவாதம் !!!

காதல் எனும் போர்க்களத்தில் 
ஆசை எனும் கன்னி வெடிகளை அவன் மனதில் புதைத்து
ஆண்களை பனையக்கைதியாக்கி
பெண்கள் நடாத்தும் தீவிரவாதம்தான் இந்த காத
ல்.







காதல் ஆரம்பம் !!!

நல்லதை தொடங்கமுன் பிள்ளையார்சுழியிட்டு தொடங்கு
வெற்றியில் முடியும் என்றார்கள்...
நானும் தொடங்கினேன் உன்னைக் காதலிக்க
நீயோ நான் வரைந்த சுழிக்கு பக்கத்தில் 
முற்றுப்புள்ளியிட்டு செல்கிறாயே இது ஞாயமாடி???







பாழாய்ப் போன காதல் !!!

நாம் ஒருவரையொருவர் சந்திக்கமுதல் 
வெறும் சமாந்தரக்கோடுகள்தான் - ஆனால் 
சந்தித்த பின்பு குத்தெதிர் கோணமாய் 
உருவானது இந்த பாழாய்ப் போன காதல் !!!

இதயவறையிலும் நீதான்!!!

என் நான்கு இதயவறைசுவர்களும் 
உன் புகைப் படம் தாங்கிறது
ஏன் தெரியுமா வேறுயாரும் 

குடிவந்திரக்கூடாது ன்பதற்கே.........

நான் என்னை வெறுத்தேன் !!!

நான் உன்னை பார்த்த பின்பு மலர்களையே வெறுத்தேன்
நடனமிடும் மயிலையும் வெறுத்தேன்
நீ என்னை வெறுத்த பிறகு கண்ணாடி பார்ப்பதையே மறந்தேன்

என்னை நானே வெறுத்தேன் !!!

காதல் வலி !!!

பூவுக்கு வலிக்குமென நினைத்திருந்தால்
பூஜைக்கேது பூ...
உன் மனதுக்கு வலிக்குமென நினைத்திருந்தால்
எனக்கிங்கு காதலேது !!!


சுமையால் பிரிவு !!!

மரத்துக்கு சுமையாக இருக்க விரும்பாத மலர்
தானாக உதிர்வதைப் போல்
நானும் உனைப் பிரிய ஆசைப் படுகிறேன் பெண்ணே!!!


Monday, September 19, 2011

காதலின் எதிர்ப்பு சேனா !!!

உன் நிழலாய் வாழநினைத்தேன்
இருளைக் கொண்டு வந்தாய்...
சூரியகாந்தி பூவாக மலரநினைத்தேன்
சூரியனாய் உதிக்க மறுத்தாய்...
உனக்காக உயிர்வாழ நினைத்தேன்
ஒட்ஷிஜனை தர மறுத்தாய்...


உன்னிடம் காதலை சொல்ல நினைத்தேன்
வார்த்தைகளை மறக்கச் செய்தாய்...
இப்படி எல்லாவற்றுக்கும்
எதிர்ப்பு சேனாவாய் இருப்பதேனடி???
இனி என் கல்லறையிலாவது ஒரு துளி கண்ணீர் விடுவாயா
என் ஆத்மாவாவது சாந்திபெற !!!


காதல் சுகந்திரம் !!!

இந்தியக் கொடியின் மத்தியில் 
இருக்கும் தர்மச்சக்கரம் போல்
எனது மனதின் நடுவே இருந்து
தினம் தினம் வன்முறை செய்யாதேடி மடந்தையே!!!
எனக்கும் காதல் சுகந்திரம் கொடுத்துவிடு
உன் நினைவுகளை சுமந்தபடியே 

வாழ்கிறேன் தனிமையில் .......

காதல் சிலுவை !!!

சிலுவை சுமந்த தேவனுக்கோ முட்களினால் 
நெற்றியைக்கட்டி சிலுவையில் அறைந்தார்கள்
ஆனால் உன் காதலை என் இதயத்தில் சுமக்கும் -  எனக்கு 

மௌனமெனும் முட்களினால் இதயத்தையே கட்டி 
காதல் சிலுவையில் அறைந்தாயேடி பெண்ணே
உன்னை விட அந்த யூதர்கள் எவ்வளவோ மேல
டி !!!

காதல் யூதாஷ் நீதானடி!!!

என்னுல் ஒழிந்திருந்த காதலை அடையாளம் காட்டியதால்
நீ கூட யூதாஷ்தானடி சகியே !!!


காதலின் மௌனம்!!!

இருந்தும் இல்லையென்றது சொந்தம்
இல்லாமல் உண்டு என்றது நட்பு
பாவம் இந்த காதல் மட்டும் ஏன் மௌனமாக இருக்கிறது.....


உயிர்கொடுத்தவளே !!!

என் உறங்கிக்கொண்டிருந்த பேனாக்கு 
கவிவரைய உயிர்கொடுத்தவளே
அதன் மை தீர்ந்தாலும் 

நான் உன்மீது கொண்ட லவ் தீராதடி.......

நானும் இப்போது கவிஞன் !!!

எனக்கும் கவிதைக்கும் சம்மந்தமில்லையடி உன்னைக் காணுமுன்
நானும் இப்போது கவிஞன் உனைக்கண்ட பின் !!!


காதலின் பின் கல்லூரி !!!

உன் வருகைக்காக காத்திருந்ததால்
என் வருகை குறைந்தது
கல்லூரி பதிவேட்டில்
சீக்கிரம் வந்துவிடு நான் 

செல்ல வேண்டும் கல்லூரிக்கு......

பேருந்தில் காதல் !!!

பெண்ணே நீ என்மீது கொண்ட காதல்
பேருந்துப் பயணம் போல்லாகுதடி...... 

இப்போது வேரொருவனை 
உன்மனதில் சுமந்து செல்வதால்!!!

காதல் நாத்திகவாதி !!!

நீ என்னைத் தாண்டிச் செல்லும் போதும்
உனைப்பார்க அடம்பிடிக்கும் என்
கண்களுக்கு எப்படி சொல்வேன்
நீ ஒரு காதல் நாத்தி
வாதியென்று !!!

கனவும் நனவும் !!!

நனவு வாழ்வில் நீ என் கனவாக இருந்தாலும்
கனவில் நீதான் என் வாழ்க்கையாக இருக்கிறாய்
இதனால்தானோ என்னவோ நான் இப்போது
அதிகம் தூங்குகிறேன் 
கனவில் உனைக்கான !!!