Tuesday, December 18, 2018

எனைமாற்றும் காதலே !!! (R LOVE S)

இணையத்தில் தொடங்கி
இதயத்தில் இணைந்தாய்  - இன்று
துடிக்கிறது உன் பேர் சொல்லி

கனவுகளில் நிதம் வந்து
தூக்கத்தை கலைத்தாய்  - இன்று
உறங்கவில்லை என் விழிகள்

மொழிகளால் தினம்பேசி
வார்த்தையை மறக்கடித்தாய் - இன்று
மௌனத்தில் என் இதழ்கள்

கண் சிமிட்டலால் கலங்கரை
விளக்கேற்றினாய் - இன்று
ஜொலிக்கிறது என் இரவுகூட

கன்னக்குழி சிரிப்பினால்
சில்மிஷம் செய்தாய்  - இன்று
சொர்கமே அந்தக்குழி எனக்கு

முத்தத்தால் யுத்தம் செய்து
என் கர்வத்தை பஷ்பமாக்கினாய்  - இன்று
ஒன்ஸ் மோர் கேக்கிறது பாவம்

நேற்று தோழி, இப்போது காதலி
காத்திருக்கிறேன் - இன்று
உனை மனைவியாக்கும் தருணத்துக்காய்.

Wednesday, July 4, 2018

எல்லாமே உனக்காக !!!


உன் பார்வை என்னை தீண்டத்தீண்ட
என் விழிகள் தோற்று போகிறதே
உன் மௌனம் என்னை தாக்கத்தாக்க
என் வார்த்தை தொலைந்து போகிறதே !

உன்னையே நேசித்தேன்
உன் மூச்சையே சுவாசித்தேன்...

உன் சுவாசம் காற்றில் சேரச்சேர
என் மூச்சி நின்று நின்று போகிறதே
உன் இதழ்கள் மெல்ல சுழிக்கச்சுழிக்க
என் கால்கள் காற்றில் மிதக்கிறதே !

உன்னையே நேசித்தேன்
உன் மூச்சையே சுவாசித்தேன்...

எல்லாமே உனக்காக
என் உயிர் கூட உனக்காக....!
எல்லாமே உனக்காக
என் ஜெம்மமே உனக்காக......!

Friday, June 22, 2018

அவளும் நானும் !!!

காதலிக்க நினைக்கவில்லை - உன்னை
காணாத என் கண்கள் - பாவம்
உன்னை கண்டபின் - என்றுமே
காதலிக்க மறக்கவில்லை!

தூக்கத்தில் உளறிய என் உதடுகள்  - இன்று
உன் முத்தத்துக்காய் உளறுகிறது
இளையராஜா காணத்தில் வசமான என் காது  - இன்று
இனியவளே உன் புன்னகை மட்டுமே கேட்கிறது!

புரியாத புதிராய் என் இன்போஸ் வந்தவளே - இன்று
அழியாத  உணர்வாய் என் இதயத்தில் நின்றவளே.
கண்ணசைவில் என்னை  சுட்டவளே - இன்று
காதல் விதையை நெஞ்சில் நட்டவளே!

களைந்து கிடந்த என் கனவுக்கு - ஒரு
கோடி வண்ணம் கொடுத்தாய்
வறண்டு கிடந்த என் நெஞ்சிக்கு - பல
செடி நட்டு நீர் விட்டாய்!

R என்னும் முதல் எழுத்தால்  - என்
S என்னும் முதல் எழுத்தை தொலைக்க வைத்தாய்
I எனும் கடை எழுத்தால் - என்
N எனும் என்னை மீண்டும் தந்தாய்!

குடையும் மழையும், அலையும் கரையும்
காற்றும் இசையும், கவியும் வரியும்
இருளும் இரவும், மலரும் தேனும் - நீ சொன்னால்
நான் சொல்வேன் அவளும் நானும் <3 <3 <3