Sunday, December 4, 2011

புரியாத புதிரே???


புதிதாய் பூத்த மலராய்
புரிந்தாய் ஒரு புன்னகை
புரிந்த அந்த புன்னகையால்
புதை மணலாய் புதைந்தேனே.....
புரட்டிய என் புஷ்த்தகத்தின் ஒவ்வொரு பக்கத்திலும்
புனிதமான உன் கால் தடங்கள்.....
புல்லாங்குழல் காற்றைப்போல் - உன்
புருவத்தின் அபிநயம் கண்டு
புட்டுக்கிச்சி என் வாய் வார்த்தைகள்.....
புலராத என் காலைப்பொழுதில்
புதுமை செய்தது உன் கைவிரல் கோலங்கள - உன்
புன்னகை தேசத்தில்
புத்தராய் நான் சகலமும் திறந்தேன்
புரியாத புதிரே என்றும் நீ எனக்கு!!!

No comments:

Post a Comment