பேனாவின் உருவாக்கத்தின்
உண்மையை உணர்ந்தேன் - மானிடா
காதல் தோல்வியால் கண்ணீர் வற்றியதால்
வார்த்தை கிறுக்கத்தானோ என்று!!!
எத்தனை கிறுக்கல்கள் மைதீரும் வரை தீர்ந்த பின்
என் உதிரத்தை மையாக்கி - நான்
எழுதிய என் காதல் கடிதங்களுக்கு
உன் உதடுகலால் முத்திரை இடுவாய் என்று நினைத்தேன் நீயோ உன் பாதணியால் பதம் பார்த்தாய் என் கன்னத்தை!!!
மரண தண்டனையின் பின் தீர்ப்பெழுதிய
பேனா முனைகளை உடைக்கலாம்
ஆனால் என் காதலுக்கு நீ
மரண தண்டனை விதித்த போதும்
என் பேனா முனைகளை உடைத்தெறிய
மனம் மறுக்கிறது ஏன்???
உனைப் பற்றி கவியெழுதிய முனையே அதனாளோ ???

No comments:
Post a Comment