Monday, August 12, 2013

வாலிபக்கவிஞன் வாலிக்கு சிந்துவின் சமர்ப்பணம் !!!

வெள்ளை பட்டாடையில் உடல் மறைத்து 
தாடிக்குள் முகம் புதைத்து வலம் வந்த கவிதைக்கரசன் நீ
உன் நெற்றிக்குங்குமம் கூறுதே ஓராயிரம் கவிதைகள்..... 

கவிதையால் வன்முறை செய்யும் வன்முறையாளன் நீ
எதுகை மோனையின் சொந்தக்காரன் நீ
கவிதைக்காக பிறந்த காவியத்தலைவன் நீ

உயிர் மெய் எழுத்துக்களை கவிதைக்குள் கட்டிபோட்டவன் நீ
தமிழில் உள்ள ஒவ்வொரு வார்த்தைக்கும் உணர்ச்சி கொடுத்தவன் நீ
ஒவ்வொரு வார்த்தையாலும் வாசகர் மனதை கரைய வைத்தவன் நீ 

நாட்பத்தி ஒன்பது வருடம் தனில்
பதினையாயிரம் பாடல்கள் உன் பேனா முனையால் 
உன் பேனா தவிக்கிறது இன்று உன் கரம் பற்ற.....

நீங்கள் கண்ணதாசனுக்கு சொன்ன கவியை உங்களுக்காக மீண்டும் 
எழுத படிக்க தெரியாத மானிடர் வரிசையில் கடவுளும் ஒருவன் 
ஒரு கவிதை புஸ்தகத்தை கிளித்து விட்டான் இன்று.....




பின் குறிப்பு : 


01. என் கவி வாசகர்களுக்கான அன்பான வேண்டுகோள் வெருமனே வாசிக்காமல் உங்கள் கருத்துக்களையும் பதிவுபன்னுங்கள். 

02. வாசகர்களுக்கான தயவான வேண்டுகோள் இந்த கிறுக்கள் பகுதியில் இணைந்து கொள்ள செய்யவேண்டியது. 



  • Join this site ஐ Click செய்க.
  • பின் உங்கள் Mail account ஐ தெரிவு செய்க. 
  • பின் உங்கள் மெயில் ID ஐ யும் password ஐயும் Type செய்து,
  • பின் done ஐ Click செய்யவும்


Saturday, August 3, 2013

வரம் இல்லாமல் கிடைத்த வரம்!!!

"நம் வாழ்வில் எது எதுக்கெல்லாம் கடவுளை பிரார்த்திக்கிறோம் 
நல்ல கல்விய கொடு, காசு கொடு, வேலை கொடு - ஏன் 
நல்ல காதலிய அல்லது நல்ல மனைவிய கொடு என்றெல்லாம் வணங்கிரம் - ஆனால் 
நல்ல நண்பனைக்கொடு இப்படி யாருமே கேட்டதில்லை -ஏன் 
அப்பிடின்னு யாராவது திங் பன்னிருக்கீங்களா............?
ஏன்னா எதிர்பாட்பில்லாமல் கிடைப்பதுதான் நட்பு."

உடலோடு உதிரமாய் 
உறையாது ஊற்றெடுப்பாய்..... விழியோடு இமையாய் 
இமைக்காமல் காத்திருபாய்..... என் பாதம் சுடுமென்று 
உன் முதுகு கதிர் எதிர்க்கும் தலை நரை வந்தபோதும் 
தளுவுதுந்தன் நினைவு நெஞ்சில் விழி சக்தி போன பின்னும் 
உன் விழியால் விம்பம் தந்தாய் இதயத்தின் இறுதி துடிப்பில் 
கலந்திருக்கும் உன் உயிர் மூச்சி நண்பா!!!
என்றும் அன்பு நண்பன் சிந்து.....





பின் குறிப்பு : 


01. என் கவி வாசகர்களுக்கான அன்பான வேண்டுகோள் வெருமனே வாசிக்காமல் உங்கள் கருத்துக்களையும் பதிவுபன்னுங்கள். 

02. வாசகர்களுக்கான தயவான வேண்டுகோள் இந்த கிறுக்கள் பகுதியில் இணைந்து கொள்ள செய்யவேண்டியது. 

  • Join this site ஐ Click செய்க.
  • பின் உங்கள் Mail account ஐ தெரிவு செய்க. 
  • பின் உங்கள் மெயில் ID ஐ யும் password ஐயும் Type செய்து,
  • பின் done ஐ Click செய்யவும்