Tuesday, April 30, 2013

உழைக்கும் கரங்கள் !!!


(முதல் முறையாக சமூகவியல் கருத்துக்களை பகிர்கிறேன். கீழ் மட்டத் தொழிலாளிகளுக்காக இந்தக் கிறுக்கல்)

தன் வேர்வைத்துளியை விதைத்து
முயட்சி எனும் நீரூற்றி
கடின உழைப்பை உரமாக்கிய
ஒவ்வொரு தொழிலாளியையும்
இன்று நாம் போற்றுவோம்.....

நீ சிந்திய ஒவ்வொரு வியர்வைத்துளியும்
இன்று உன்பேர் சொல்லும்
உன் உள்ளங்கை காயங்களில் வழிந்தோடும்
உதிரம் உனைப் பற்றி கவிவடிக்கும்
உன் உடலின் ஒவ்வொரு அவையும்
படும் பாட்டை யாமறியோம்.....
உன் சரீரம் கொண்ட ஒவ்வொரு வலியும் 
எம் இதயங்களையும் வலிக்கச்செய்யும் - ஆனால்
நீங்கள் கண்ணீர் மட்டும் சிந்தாதீர்கள்
அது இந்த பூலோகத்தையே சுட்டெரித்து விடும்.....

தரணியில் உள்ள அனைத்து தொழிலாளர்களுக்கும் சிந்துவின் வாழ்த்துக்கள்.....!!!

















பின் குறிப்பு : 


01. என் கவி வாசகர்களுக்கான அன்பான வேண்டுகோள் வெருமனே வாசிக்காமல் உங்கள் கருத்துக்களையும் பதிவுபன்னுங்கள். 

02. வாசகர்களுக்கான தயவான வேண்டுகோள் இந்த கிறுக்கள் பகுதியில் இணைந்து கொள்ள செய்யவேண்டியது. 
  • Join this site ஐ Click செய்க.
  • பின் உங்கள் Mail account ஐ தெரிவு செய்க. 
  • பின் உங்கள் மெயில் ID ஐ யும் password ஐயும் Type செய்து,
  • பின் done ஐ Click செய்யவும்.

Thursday, April 25, 2013

இதயத்துக்கே மின்னட்கடத்தியா ???

ஆகாய மேகத்தால் அவதரித்த பதுமையே 
உனை என் பேனா முனைகளால் 
வரையருக்க ஆசைப்பட்டேன் வார்த்தைகள் வரவில்லை..... 

இடைவிடாது இசைமீட்டிய - உன் 
கொழுசொலியை பதிவுபன்ன பாடுபட்டேன் 
ஸ்வரங்கள் ஆலாபித்தன..... 

உள்ளங்கால் ரேகையினை ஓவியமாக்க 
ஓராயிரம் தூரிகை செய்தேன் 
வர்ணம் வரவில்லை..... 

கன்னக்குழி ஆழத்தை துணிய 
தியொடலைட்யை செப்பம் செய்தேன் - ஆனால் 
அதன் எண்மாணம் தினரிப்போனது பெண்ணே.....


உன் கருவிழி சிமிட்டல் கண்டு என் 
இதயத்துக்கே மின்னட்கடத்தி செய்தேன் - ஆனால் 
உன் காதல் மின்திறனால் என் இதயமே பஷ்பமாகியது பிரியசகி.....






















பின் குறிப்பு : 


01. என் கவி வாசகர்களுக்கான அன்பான வேண்டுகோள் வெருமனே வாசிக்காமல் உங்கள் கருத்துக்களையும் பதிவுபன்னுங்கள். 

02. வாசகர்களுக்கான தயவான வேண்டுகோள் இந்த கிறுக்கள் பகுதியில் இணைந்து கொள்ள செய்யவேண்டியது. 
  • Join this site ஐ Click செய்க.
  • பின் உங்கள் Mail account ஐ தெரிவு செய்க. 
  • பின் உங்கள் மெயில் ID ஐ யும் password ஐயும் Type செய்து,
  • பின் doneClick செய்யவும். 







Saturday, April 13, 2013

புதைக்கப்பட்ட காதல் விதை .....!!!


(என் கவி வாசகர்களின் வேண்டுகோளுக்கினங்க மீண்டும் ஒரு கவி "புதைக்கப்பட்ட காதல் விதை)

இருட்டறையில் மெழுகுவர்த்தியாய் 
இமை மூட உன் முகம்..... 
செவ்வாயில் கூட இடம் கிடைத்து விடும் ஆனால் 
நிலவு உன்னிடம் மட்டும் அது கிடைக்காதா பெண்ணே.....

அடை மழையில் வெறும் காகிதக் கப்பலாய்
என் காதல் பயணம் மூழ்கியது இடை நடுவே.....
மொன்சூன் காற்றில் சிக்கிய சிறு காற்றாடியாய்
சிதைந்து போனது என் காதல் சின்னங்கள்.....

மின்னலில் சிக்கிய சிறு புல்லாய் இன்று - என்
காதலும் மூச்சி விட முடியாது தவிக்குதடி.....
மண்சரிவில் சிக்கிய சருகாய் - என் காதலும் 
எனக்குள்ளே புதைக்கப்பட்டது விதைக்கப்பட்டது.....





பின் குறிப்பு : 


01. என் கவி வாசகர்களுக்கான அன்பான வேண்டுகோள் வெருமனே வாசிக்காமல் உங்கள் கருத்துக்களையும் பதிவுபன்னுங்கள். 

02. வாசகர்களுக்கான தயவான வேண்டுகோள் இந்த கிறுக்கள் பகுதியில் இணைந்து கொள்ள செய்யவேண்டியது. 

  • Join this site ஐ Click செய்க.
  • பின் உங்கள் Mail account ஐ தெரிவு செய்க. 
  • பின் உங்கள் மெயில் ID ஐ யும் password ஐயும் Type செய்து,
  • பின் done ஐ Click செய்யவும். 

Friday, April 12, 2013

துபாய் நகரம் உறங்கும் நேரம்.....!!!

துபாய் நகரம் உறங்கும் நேரம் 
நானும் உறங்கினேன் - ஆனால் 
என் நினைவுகள் உறங்கவில்லை 
பேர்ஜ் கலீபாவின் உயரம் வரை அலைந்து திரிந்தது.....

சிந்து இன்னும் சாப்பிட வில்லையா 
என்ற அக்காவின் குறலோசை
மகன் இன்னும் தூங்க வில்லையா 
என்ற அம்மாவின் குறலோசை - என் 
இரு செப்பறைகளிலும் எதிரொலிப்பது போலிருக்க 
என்னிரவுகள் நீண்டபடியே தொடர்ந்தது.....

ஒன்றல்ல இரண்டல்ல ஐவிரு 
நேர்முகப் பரீட்சைகள் - பதில் 
நாளை கிடைக்குமா? இல்லையா? - என்று 
நினைத்தபடியே என் இமை மூட மறந்தது.....

விலைமாதுகளின் அணிவகுப்பு ஒரு புறம் 
அதை விலை பேச சேட்டாக்களின் அணிவகுப்பு மறு புறம் 
இந்த தெருக்கூத்தின் நடுவில் - என் 
துபாய் வாழ்க்கை நடந்தேறியது......

என் வேலைக்கும் பதில் கிடைத்தது 
அத்தனை தடைகளிலும், அத்தனை சிக்களிலும் 
நண்பனாய், தந்தையாய் தோள் கொடுத்தாய் - அண்ணா 
என்றும் தொடர நம் இரத்த உறவு.....






















பின் குறிப்பு : 


01. என் கவி வாசகர்களுக்கான அன்பான வேண்டுகோள் வெருமனே வாசிக்காமல் உங்கள் கருத்துக்களையும் பதிவுபன்னுங்கள். 

02. வாசகர்களுக்கான தயவான வேண்டுகோள் இந்த கிறுக்கள் பகுதியில் இணைந்து கொள்ள செய்யவேண்டியது. 
  • Join this site ஐ Click செய்க.
  • பின் உங்கள் Mail account ஐ தெரிவு செய்க. 
  • பின் உங்கள் மெயில் ID ஐ யும் password ஐயும் Type செய்து,
  • பின் done ஐ Click செய்யவும்.