Thursday, November 17, 2011

பூமிக்கு ஈடு நீதானடி!!!


ஆதவனும் அதன் சூழ் கோல்களும் 
கருந்துழை நோக்கி நகர்கிறது 
இது விஞ்ஞானம் சொன்னது 
ஆனால் நானும் என்மனமும் 
உனை நோக்கியே நகர்கிறோம் பெண்ணே 


பூமிபோல் உன்னுள்ளும் 
தினம்தினம் எத்தனை மாற்றங்கள் 
எத்தனை கவர்ச்சிகள் உன்னில் 
ஆனாலும் உனை சுற்றி சுற்றி ரசிக்கும் 
நிலா நான்தானடி பெண்ணே 
இதனால் பூமிக்கு ஈடு நீதானடி!!!





No comments:

Post a Comment