Wednesday, June 13, 2012

உதிரத்தால் இணைவோம் !!!

நண்பனின் மின்னஞ்சல் உங்கள் பார்வைக்கு
இதை வெறும் கவிதையாக ம ட் டும் நினைக்காதீர்கள் நீங்களும் ஒரு துளி உதிரம் வழங்கி உணர்ந்து பாருங்கள் )

செய்தி தொலை பேசியில் அறியும் போது
கண்ணில் கண்ணீர் கசிந்தது
என்னை நினைத்து அல்ல
அந்த பிள்ளையின் தாய் ஆனந்த கண்ணீருடன்
என்னை ஆசீர்வதித்ததை நினைத்து.....

பெருமைக்காக அல்ல
புகழுக்காக அல்ல
இந்த வார்த்தைகள் 
நான் அடைந்த ஆத்ம திருப்தியை
உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்காக மட்டுமே.....

வாழ்க்கை பூராக பிறரின் குருதியில் வாழப்போகும்(Thalasemia)
அந்த குழந்தையை போன்றுள்ள
எல்லா குழந்தைக்கும் குருதி வழங்குவோம்.....

எம்மைப்போன்று எந்த குறையும் இல்லாமல் இருக்கும்
இளைஞர்கள் ரத்ததானத்தில் பங்கேற்கவே - இது
தாய் தந்த குருதியில் ஒரு துளி வழங்கி
இரத்தத்தால் இணைவோம் நண்பர்களே !!!





பின் குறிப்பு : 


01. என் கவி வாசகர்களுக்கான அன்பான வேண்டுகோள் வெருமனே வாசிக்காமல் உங்கள் கருத்துக்களையும் பதிவுபன்னுங்கள். 

02. வாசகர்களுக்கான தயவான வேண்டுகோள் இந்த கிறுக்கள் பகுதியில் இணைந்து கொள்ள செய்யவேண்டியது. 
  • Join this site ஐ Click செய்க.
  • பின் உங்கள் Mail account ஐ தெரிவு செய்க. 
  • பின் உங்கள் மெயில் ID ஐ யும் password ஐயும் Type செய்து,
  • பின் done ஐ Click செய்யவும். 

Monday, June 4, 2012

நண்பனுக்காய் ஒரு கிறுக்கல் !!!


(பிரியமான நண்பன் பிரியந்தனுக்கு சிந்துவின் பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்)

நினைவுகளை நினைக்கையில்
நிழலாடும் நம் நட்பு
கனவுகளை நிஜமாக்க
கவிபாடும் நம் வார்த்தைகள்
உறவுகளை உணரவைக்க
உதிரம்கூட ஊற்றெடுக்கும்...

பிரார்த்தனையில் கிடைத்த ஆயிரத்தைவிட
பிராத்திக்காமல் கிடைத்த நண்பன் நீ
பிரமனின் படைப்புதனில்
பிரமிக்க வைத்த ஓர் உயிர் நீ
பிடிக்காத உறவுகளின் பின்னனியில் ஓர்
பிடித்த உறவாய் நீ...

உன் அமைதியான வார்த்தைகள்
நம் நட்புக்கோர் ஆணிவேர்
உன் உதட்டுவழி சிரிப்பு
நம் நட்புக்கோர் பக்கபலம்
உன் தொல்லைபேசி sorry தொலைபேசி அழைப்பு
நம் நட்புக்கோர் உறவுப்பாளம்
நேற்று நீ யாரோ ஆனால்
இன்றும் என்றும் என் அன்பு நண்பேண்டா !!!









பின் குறிப்பு : 


01. என் கவி வாசகர்களுக்கான அன்பான வேண்டுகோள் வெருமனே வாசிக்காமல் உங்கள் கருத்துக்களையும் பதிவுபன்னுங்கள். 

02. வாசகர்களுக்கான தயவான வேண்டுகோள் இந்த கிறுக்கள் பகுதியில் இணைந்து கொள்ள செய்யவேண்டியது. 
  • Join this site ஐ Click செய்க.
  • பின் உங்கள் Mail account ஐ தெரிவு செய்க. 
  • பின் உங்கள் மெயில் ID ஐ யும் password ஐயும் Type செய்து,
  • பின் done ஐ Click செய்யவும். 

Sunday, May 13, 2012

ஹைக்கூஸ் !!!

பணம் - உறவுகளை அளக்கும் அளவுகோள்
திருமணம் - தாய் மகன் உறவுக்கான பிரியாவிடை
கனவு - என்னைப் போன்ரோரின் சொர்க்கம்
தோல்வி - எனக்குக் கிடைத்த நிறந்தரமான வெற்றி
மௌனம் - செய்யத் தெரிந்தவனின் ஆயுதம்
மரணம் - நம் வாழ்க்கைக் கவிதைக்கான முற்றுப் புள்ளி...







Wednesday, March 7, 2012

அன்னைக்கு சிந்துவின் கவி முத்தம்!!!

(மகளீர்தினத்துக்கான சிந்துவின் சிறப்புக்  கிறுக்கல்.)

நான் கண்ட உண்ணதமான பெண் என் அன்னைக்கு சிந்துவின் கவி முத்தம்!!!


அன்பெனும் அரணுக்குள் என்னை அடக்கியாண்டவள் -நீ 
கண்ணீர்த்துளிகளால் என்னை கரையவைத்தவள் -நீ 
இந்த வாழ்க்கையெனும் திரைக்கதைக்கு என்னை அறிமுகப்படுத்தியவள் -நீ 
என் துன்ப துயரங்களுக்காய் கண்ணீர் சிந்த மடி தந்தவள் -நீ 


கருமுகிழ் தந்த மழையோ ஓரிரு வாரங்கள் 
உன் கருவறை தந்த இதமோ ஐவிரு மாதங்கள் 
சிந்து இது நீயெனக்கிட்ட பெயர் 
உடல் நீயெனக்கிட்ட பிச்சை 
உயிர் நீயென்களித்த வரப்பிரசாதம் -ஆனால் 
உனக்களிக்க ஏது மில்லா 
ஏழையாய் இந்த சிந்து.....

சாஜஹான் காதலுக்கு ஒரு தாஜ்மஹால் என்றால் 
அம்மா நான் உன்மீது கொண்ட காதலுக்கு 
ஓராயிரம் தாஜ்மஹாலும் போதாதம்மா!!!
நான் கண் திறந்து கண்ட முதல் பெண் நீ 
அது போல கண்மூடும் போதும் உனைப் பார்க்க 
என் கண்கள் துடிக்குதம்மா!!!








பின் குறிப்பு : 


01. என் கவி வாசகர்களுக்கான அன்பான வேண்டுகோள் வெருமனே வாசிக்காமல் உங்கள் கருத்துக்களையும் பதிவுபன்னுங்கள். 

02. வாசகர்களுக்கான தயவான வேண்டுகோள் இந்த கிறுக்கள் பகுதியில் இணைந்து கொள்ள செய்யவேண்டியது. 
  • Join this site ஐ Click செய்க.
  • பின் உங்கள் Mail account ஐ தெரிவு செய்க. 
  • பின் உங்கள் மெயில் ID ஐ யும் password ஐயும் Type செய்து,
  • பின் done ஐ Click செய்யவும். 

Tuesday, March 6, 2012

சொப்பணத்தில் ஒரு + தீ !!!


கவிதை எழுத ஆசைப்பட்டேன் 
வார்த்தை வரவில்லை 
சிந்தித்தேன் வார்த்தைகளைப்பெற 
காதலித்தால் வார்த்தை வரலாம் என்று எண்ணி 
காதலிக்க ஆசைப்பட்டேன் 
காதலி கிட்டவில்லை 
கவிதையும் வரவேண்டும் 
காதலியும் கிட்டவேண்டும்..... 

கற்பனையில் ஒரு காதலி என் கவிதைக்காக 
காதலித்தேன் உயிரை விட மேலாக அவளை 
காதலித்தேன் இரவு பகலாய் அவளை 
காதலித்தேன் நீர் ஆகாரம் தொடாமல் அவளை 
காதலித்தேன் சொந்த பந்தங்களை மறந்து அவளை 

காதலித்தாள் அவளும் என்னை 
தாய்க்குத் தாயாய் 
தோழிக்கு தோழியாய் 
அன்புக்கு முத்தமாய் 
பாசத்துக்கு அரவனைப்பாய் 

இப்படியே பல நாட்கள் அவளோடு நான் 
கண்விழித்துப் பார்த்தேன் 
சொப்பணம் களைந்தது 
வார்த்தைகள் தொலைந்தது 
இந்த ஹைக்கூ குபேரனுக்கு

கனவிலே வாழ்க்கை என்றால்
நான் கூட சாஜஹான்தான் ஆனால் 
நனவிலோ தேவதாஷ் மட்டுமே!!!



  • பின் குறிப்பு : 

    01. என் கவி வாசகர்களுக்கான அன்பான வேண்டுகோள் வெருமனே வாசிக்காமல் உங்கள் கருத்துக்களையும் பதிவுபன்னுங்கள். 
    02. வாசகர்களுக்கான தயவான வேண்டுகோள் இந்த கிறுக்கள் பகுதியில் இணைந்து கொள்ள செய்யவேண்டியது. 
    • Join this site ஐ Click செய்க.
    • பின் உங்கள் Mail account ஐ தெரிவு செய்க. 
    • பின் உங்கள் மெயில் ID ஐ யும் password ஐயும் Type செய்து,
    • பின் done ஐ Click செய்யவும். 

Monday, February 13, 2012

தனிமையில் ஒரு காதலன்!!!

இமையில்லா விழியாய் காதல் புயலில் 
திசை தேடும் வழிப்போக்கனாய் - நான்
உயிர் இல்லா உடலாய் காதல் இடுகாட்டில் 
அனாதை பிணமாய் - நான்
காதலியில்லாமல் காதலர்தினம் கொண்டாடும் 
காதலன் வரிசையில் நானும் இன்று.....


முகப்புத்தகத்தில் பலரை ண்பனாக ஏற்ற நீ 
எனை நண்பனாகக்கூட ஏற்க மறுப்பதேனோ.....
ஆயிரம் வார்த்தைகளை அள்ளி வீசும் நீ 
எனக்கென ஒரு ஹாய் சொல்ல மறந்ததேனோ.....
அடிக்கடி புன்னகை சிந்தும் நீ 
சிந்துக்கென ஒரு முறை உதடு சுழிக்க மாட்டாயா???


சொல்லாமல் சொல்லிய என் காதல் கோரிக்கைக்கு 
சிவப்பு ரோஜா தந்து உயிர் கொடுப்பாயா???
இல்லை வெள்ளை மலர் வளையம் தந்து 
உயிர் குடிப்பாய சொல்லடி பெண்ணே???
இன்னமும் உனக்கு புரியலையாடி
நாவிரு வருடமாய் தனிமையில் என் காதலர்தினம் 
இம் முறையாவது சேர்ந்து கொண்டாட 
வாய்ப்பளிப்பாயா???
பதில் சொல்லடி???