Monday, September 26, 2011

காதல் கணக்கு ++

நானாக இருந்த என்னை உனைக்குறித்து வகையிட்டு 
நீயாக மாற்றியவள் நீதானடி 
ஒரு வட்டமாக இருந்த எனக்கு 
தொடலிபோல் ஒரு பரிசம் காட்டி சென்றவள் நீதானடி!!! 


வெறும் தொகையீடாக தொலைந்த என்னை 
உன் மின்னல் விழிப்பார்வையால் வரையறுத்து அடையாளம் காட்டினாயடி 
சீரான கதியில் சென்ற என் எண்ணங்களை 
ஆர்முடுக்கியவளும் நீதானடி!!! 


நேராக இருந்த என் தன்னம்பிக்கையை 
மறை திசை நோக்கி நகரச் சொய்தவள் நீதானடி 
ஒற்றை வலுப்பின்னமாக இருந்த என் இதயத்தில் - இன்று 
உன் நினைவுகள் சேர்ந்ததால் கலப்புப் பின்னமாக தவிக்கிறது பெண்ணே!!!


மெய் எண்ணாக சிமிட்டிய என் கண்கள் 
இப்பொழுது சிக்கலெண்ணாக கண்ணீர் சிந்துகிறது 
இந்த என் காதல் கணக்குக்கு செய்முறையும்
தீர்வும் உன் காதல்தானடி பெண்ணே!!! 


காத்திருக்கிறான் உன்தன் சிந்து 
கிடக்கிறதோ இவன் மனமோ நொந்து 
தயங்காமல் என் முன் உன் வரவு வந்து 
உன் மொழியால் காதல் அனுமதி தந்து 
பின் பாடுவோம் ஒரு காதல் சிந்து!!!


























பின் குறிப்பு : 


01. என் கவி வாசகர்களுக்கான அன்பான வேண்டுகோள் வெருமனே வாசிக்காமல் உங்கள் கருத்துக்களையும் பதிவுபன்னுங்கள். 

02. வாசகர்களுக்கான தயவான வேண்டுகோள் இந்த கிறுக்கள் பகுதியில் இணைந்து கொள்ள செய்யவேண்டியது. 
  • Join this site ஐ Click செய்க.
  • பின் உங்கள் Mail account ஐ தெரிவு செய்க. 
  • பின் உங்கள் மெயில் ID ஐ யும் password ஐயும் Type செய்து,
  • பின் done ஐ Click செய்யவும். 

2 comments:

  1. காதல் கணக்கு போடும் முன் வாழ்கை கணக்கு மிக முக்கியம் என் ஆருயிர் நன்பா .....
    இந்தக்கணக்கையும் புரிந்து கொள் ....

    ×÷+−×÷+−×÷+−×÷+− வாழ்கை கணக்கு ×÷+−×÷+−×÷+−
    ஆண்,பெண் ற்கு சந்திப்பை பெருக்கினால் ,
    (ஆண் + பெண்)சந்திப்பு = காதல் ---(1)
    காதல் + சம்மதம் + ஆசீர்வாதம் = கல்யாணம்
    காதல் * கருத்துமுரண்பாடு = பிரச்சனை---(2)
    கருத்துமுரண்பாடு = பிரிவு * வெறுப்பு-----(3)
    3 ஐ 2 இல் பிரதியிட ,
    காதல் * பிரிவு * வெறுப்பு = பிரச்சனை----(4)
    சந்திப்பு * பிரிவு = 0
    1 ஐ 4 இல் பிரதியிட -----(5)
    (ஆண் + பெண்)சந்திப்பு * பிரிவு * வெறுப்பு = பிரச்சனை
    சந்திப்பு * பிரிவு = பிரச்சனை/(ஆண் + பெண்)வெறுப்பு
    =0
    பிரச்சனைக்கு கீழே ஆணும் பெண்ணும் வெறுப்புடன் வாழ்ந்தால் இறுதியில் ஒன்றும் மிஞ்சாது .....

    ReplyDelete
  2. வாழ்க்கை எவ்வளவு சிக்கலாட???

    ReplyDelete