இன்னும் சேரவேண்டிய இடம் வரவில்லையே.....
கருவறையில் தொடங்கிய நம் காதல் புஸ்த்தகத்தின்
பக்கங்கள் இன்னுமே புரட்டப்பட்டுக் கொண்டே இருக்கிறது.....
இந்தப் பூலோகமே - காதல்
சக்கரத்தில்தான் சுழன்று கொண்டிருக்கிறது.....
மண்ணுக்கும் மழைக்கும் காதல்
விண்ணுக்கும் முகிழுக்கும் காதல்
கடலலைக்கும் கரைக்கும் காதல்
காற்றுக்கும் இசைக்கும் காதல்
பூவுக்கும் வண்டுக்கும் காதல்
இரவுக்கும் இருளுக்கும் காதல்
உடலுக்கும் உயிருக்கும் காதல்
கல்லுக்கும் சிற்பத்துக்கும் காதல்.......
இயற்கையே காதலில் விழுந்தபோது
நீங்கள் மட்டும் ஏன் காதலை வெறுக்கிறீர்கள்......
காதல் இல்லையேல் கவிதை எங்கே?
காவியம் எங்கே?
கம்பன் எங்கே?
நீங்கள் எங்கே?
நான் எங்கே ???
ஆதாம்- ஏவாள்
லைலா-மஜ்னு
சத்தியவான்-சாவித்ரி
சாஜஹான்- மும்தாஜ்......
இவர்களின் உடல்கள்தான் புதைக்கப்பட்டாலும்
அவர்களின் காதல் இன்னுமே வாழ்ந்து கொண்டேதான் இருக்கிறது....
உங்கள் உடலை உயிர் காதலிக்க மறுத்தால்
நீங்கள் கூட வெறும் பிணம்தான்.....
உயிர்கூட உடலைக் காதலிக்கும் போது
நீங்கள் மட்டும் காதலை வெறுப்பது தகுமா?
பூக்கள் புகார் செய்து தோட்டக்காரனின் வேலை தொலைவதில்லை
நீங்கள் காதல் செய்தால் உங்கள் வாழ்க்கையும் தொலையாது......
கவிதையை காதலிக்கும் நீங்கள்
காதலையும் காதலித்துப் பாருங்கள் ஒருமுறையாவது....!!!
http://www.youtube.com/watch?v=S16801fIFCc

No comments:
Post a Comment