Friday, November 15, 2013

ஆரம்பம் .....!!!

கானல் நீர் தேடும் மீனாய் கானாமல் போனது என் காதல்
ஆயுல் ரேகையை ஆராய்ந்து பார்க்காத - நான்
காதல் ரேகை தேடி உள்ளங்கையில் ஓர் ஊர்வலம்.....

மூச்சு நின்றால் மரணம் என்றார்கள் ஆனால் - எனக்கு
அது வரவில்லை உன் மூச்சுக்காற்றை சுவாசிப்பதால்
தண்ணீரில் நிழல் மூழ்காது
கண்ணீரில் இமை மூடாது  - அது போல்
என் மரண படுக்கையிலும் உன் நினைவழியது.....

காதல் தேடும் வழிப்போக்கனாய் கால்கள் விரைந்து ஓடுதே
காதலி தேடும் தேடலின் நடுவே விழிகள் நடனம் ஆடுதே - இவை
இரெண்டுக்கும் நடுவினிலே பாவம் இதய துடிப்பு தடுமாறுதே.....

காதல் கனவோடு வாழாமல் - உன்
நிஜத்தோடு சேரவே
ஐவைந்து வருடமாய் சொப்பனம் தந்தவளின்
முகவரி தேடி தொடங்குதே என் காதல் பயணத்தின் ஆரம்பம்.....




பின் குறிப்பு : 
01. என் கவி வாசகர்களுக்கான அன்பான வேண்டுகோள் வெருமனே வாசிக்காமல் உங்கள் கருத்துக்களையும் பதிவுபன்னுங்கள். 

02. வாசகர்களுக்கான தயவான வேண்டுகோள் இந்த கிறுக்கள் பகுதியில் இணைந்து கொள்ள செய்யவேண்டியது. 

  • Join this site ஐ Click செய்க.
  • பின் உங்கள் Mail account ஐ தெரிவு செய்க. 
  • பின் உங்கள் மெயில் ID ஐ யும் password ஐயும் Type செய்து,
  • பின் done ஐ Click செய்யவும்

No comments:

Post a Comment