Monday, August 12, 2013

வாலிபக்கவிஞன் வாலிக்கு சிந்துவின் சமர்ப்பணம் !!!

வெள்ளை பட்டாடையில் உடல் மறைத்து 
தாடிக்குள் முகம் புதைத்து வலம் வந்த கவிதைக்கரசன் நீ
உன் நெற்றிக்குங்குமம் கூறுதே ஓராயிரம் கவிதைகள்..... 

கவிதையால் வன்முறை செய்யும் வன்முறையாளன் நீ
எதுகை மோனையின் சொந்தக்காரன் நீ
கவிதைக்காக பிறந்த காவியத்தலைவன் நீ

உயிர் மெய் எழுத்துக்களை கவிதைக்குள் கட்டிபோட்டவன் நீ
தமிழில் உள்ள ஒவ்வொரு வார்த்தைக்கும் உணர்ச்சி கொடுத்தவன் நீ
ஒவ்வொரு வார்த்தையாலும் வாசகர் மனதை கரைய வைத்தவன் நீ 

நாட்பத்தி ஒன்பது வருடம் தனில்
பதினையாயிரம் பாடல்கள் உன் பேனா முனையால் 
உன் பேனா தவிக்கிறது இன்று உன் கரம் பற்ற.....

நீங்கள் கண்ணதாசனுக்கு சொன்ன கவியை உங்களுக்காக மீண்டும் 
எழுத படிக்க தெரியாத மானிடர் வரிசையில் கடவுளும் ஒருவன் 
ஒரு கவிதை புஸ்தகத்தை கிளித்து விட்டான் இன்று.....




பின் குறிப்பு : 


01. என் கவி வாசகர்களுக்கான அன்பான வேண்டுகோள் வெருமனே வாசிக்காமல் உங்கள் கருத்துக்களையும் பதிவுபன்னுங்கள். 

02. வாசகர்களுக்கான தயவான வேண்டுகோள் இந்த கிறுக்கள் பகுதியில் இணைந்து கொள்ள செய்யவேண்டியது. 



  • Join this site ஐ Click செய்க.
  • பின் உங்கள் Mail account ஐ தெரிவு செய்க. 
  • பின் உங்கள் மெயில் ID ஐ யும் password ஐயும் Type செய்து,
  • பின் done ஐ Click செய்யவும்


No comments:

Post a Comment