Friday, December 27, 2013

சுனாமிக்கோர் வசைகவி!!!

புயலென வந்திருந்தால் பூட்டியே வைத்திருப்பேன் பெரும் நதியென வந்திருந்தால் அணை கட்டி தடுத்திருப்பேன் பஞ்ஜெம்தான் சூழ்ந்திருந்தால் பணம்காசு கொடுத்திருப்பேன் நீ கொண்டு வந்ததோ பேரலை அதற்கு நான் என்செய்வேன்.....
அரவணைத்த அன்னை எங்கே? அன்பான தந்தை எங்கே? தோல் கொடுத்த தோழன் எங்கே? விரல் கோர்த்த மனைவி எங்கே? அனைவரையும் அள்ளி சென்றாய் - என் வாழ்வில் மண் அள்ளி தூவி சென்றாய்.....

நாம் கோளம் போட்ட முற்றம் எங்கே? எனை பார்த்து சிரித்த தோட்டத்து பூக்கள் எங்கே? அத்தனையும் சுருட்டி சென்றாய் எனை தனிமையில் இருட்டில் இட்டாய் துரோகியே!!!

யாரடி நீ தாடகையோ 
எமன் வீட்டு நாயோ 
வகிரெரிந்து திட்டுகிறேன் 
மண் அள்ளி துற்றுகிறேன் 
நீ நாசமாய் போக.....



No comments:

Post a Comment