என் கண்ணில் வழியும் கண்ணீர் தரை தொட முன்னமே
துடைத்து ஆறுதல் சொல்வாயம்மா
இங்கே என் கை குட்டை எனைக்கேள்வி கேட்கிறது .....
வெளியே புன்சிரிப்பு உள்ளே கண் கசக்கு - என
ஏன் இரட்டை வேடம் என்று
முகம் பார்க்கும் கண்ணாடி எனைக்கேள்வி கேட்கிறது .....
உறங்கும் போது காபி..... எழும் போது காபி.....
என உன் அன்புக்கரத்தால் தருவாயே அம்மா - ஆனால்
இங்கு எனை எழுப்பும் அலாரம்கூட சிரிக்குதம்மா.....
அன்று வலிக்கவில்லை - ஆனால்
இப்ப வலிக்குதாம்மா..... நெஞ்சுதவிக்கிதம்மா.....
உன் அன்பை தேடி.....
பின் குறிப்பு :
01. என் கவி வாசகர்களுக்கான அன்பான வேண்டுகோள் வெருமனே வாசிக்காமல் உங்கள் கருத்துக்களையும் பதிவுபன்னுங்கள்.
02. வாசகர்களுக்கான தயவான வேண்டுகோள் இந்த கிறுக்கள் பகுதியில் இணைந்து கொள்ள செய்யவேண்டியது.
- Join this site ஐ Click செய்க.
- பின் உங்கள் Mail account ஐ தெரிவு செய்க.
- பின் உங்கள் மெயில் ID ஐ யும் password ஐயும் Type செய்து,
- பின் done ஐ Click செய்யவும்.

No comments:
Post a Comment