Friday, April 12, 2013

துபாய் நகரம் உறங்கும் நேரம்.....!!!

துபாய் நகரம் உறங்கும் நேரம் 
நானும் உறங்கினேன் - ஆனால் 
என் நினைவுகள் உறங்கவில்லை 
பேர்ஜ் கலீபாவின் உயரம் வரை அலைந்து திரிந்தது.....

சிந்து இன்னும் சாப்பிட வில்லையா 
என்ற அக்காவின் குறலோசை
மகன் இன்னும் தூங்க வில்லையா 
என்ற அம்மாவின் குறலோசை - என் 
இரு செப்பறைகளிலும் எதிரொலிப்பது போலிருக்க 
என்னிரவுகள் நீண்டபடியே தொடர்ந்தது.....

ஒன்றல்ல இரண்டல்ல ஐவிரு 
நேர்முகப் பரீட்சைகள் - பதில் 
நாளை கிடைக்குமா? இல்லையா? - என்று 
நினைத்தபடியே என் இமை மூட மறந்தது.....

விலைமாதுகளின் அணிவகுப்பு ஒரு புறம் 
அதை விலை பேச சேட்டாக்களின் அணிவகுப்பு மறு புறம் 
இந்த தெருக்கூத்தின் நடுவில் - என் 
துபாய் வாழ்க்கை நடந்தேறியது......

என் வேலைக்கும் பதில் கிடைத்தது 
அத்தனை தடைகளிலும், அத்தனை சிக்களிலும் 
நண்பனாய், தந்தையாய் தோள் கொடுத்தாய் - அண்ணா 
என்றும் தொடர நம் இரத்த உறவு.....






















பின் குறிப்பு : 


01. என் கவி வாசகர்களுக்கான அன்பான வேண்டுகோள் வெருமனே வாசிக்காமல் உங்கள் கருத்துக்களையும் பதிவுபன்னுங்கள். 

02. வாசகர்களுக்கான தயவான வேண்டுகோள் இந்த கிறுக்கள் பகுதியில் இணைந்து கொள்ள செய்யவேண்டியது. 
  • Join this site ஐ Click செய்க.
  • பின் உங்கள் Mail account ஐ தெரிவு செய்க. 
  • பின் உங்கள் மெயில் ID ஐ யும் password ஐயும் Type செய்து,
  • பின் done ஐ Click செய்யவும். 

2 comments: