Monday, February 13, 2012

தனிமையில் ஒரு காதலன்!!!

இமையில்லா விழியாய் காதல் புயலில் 
திசை தேடும் வழிப்போக்கனாய் - நான்
உயிர் இல்லா உடலாய் காதல் இடுகாட்டில் 
அனாதை பிணமாய் - நான்
காதலியில்லாமல் காதலர்தினம் கொண்டாடும் 
காதலன் வரிசையில் நானும் இன்று.....


முகப்புத்தகத்தில் பலரை ண்பனாக ஏற்ற நீ 
எனை நண்பனாகக்கூட ஏற்க மறுப்பதேனோ.....
ஆயிரம் வார்த்தைகளை அள்ளி வீசும் நீ 
எனக்கென ஒரு ஹாய் சொல்ல மறந்ததேனோ.....
அடிக்கடி புன்னகை சிந்தும் நீ 
சிந்துக்கென ஒரு முறை உதடு சுழிக்க மாட்டாயா???


சொல்லாமல் சொல்லிய என் காதல் கோரிக்கைக்கு 
சிவப்பு ரோஜா தந்து உயிர் கொடுப்பாயா???
இல்லை வெள்ளை மலர் வளையம் தந்து 
உயிர் குடிப்பாய சொல்லடி பெண்ணே???
இன்னமும் உனக்கு புரியலையாடி
நாவிரு வருடமாய் தனிமையில் என் காதலர்தினம் 
இம் முறையாவது சேர்ந்து கொண்டாட 
வாய்ப்பளிப்பாயா???
பதில் சொல்லடி??? 



No comments:

Post a Comment