Saturday, February 26, 2011

காதல் என்பதும் தீவிரவாதம்தான் !!!

உன் கண்களெனும் கன்னிப் பொறியில்
மாட்டியது என் கால்கலல்ல என் இதயமடி.....
உன் சிரிப்பு எனும் தோட்டா வேட்டுக்களால்
என் இதயத்தை தாக்கினாயடி.....
உன் கால் கொலுசின் சினுங்கல்
ஒவ்வொன்றும் கிரினைட் வீச்சுக்களடி.....

உன் கழுத்தின் சங்கிலி
அதுதானடி எனக்கு கைவிலங்கு.....
அன்பே நீ பேசும் ஒவ்வொரு
வார்த்தைகளும் டைம்வாம்களடி.....
உன் மௌனம்தானடி என்னைத்
தாக்கிய மிகப்பெரிய ஆயுதம்.....

உன் முப்படை கொண்டு என்னைச் சுற்றி வளைத்ததால்
உன் தீவிரவாதத்தில் இன்னும் நான் பணயக்கைதிதானடி சகியே...!!!
ஆனால் நானும் பதில் தாக்குதல்களை நிறுத்தமாட்டேனடி
அடி பெண்ணே நீ என்னையும் என் காதலையும்
எப்படி அடக்க நினைத்தாலும்
என் காதல் சாம்ராஜ்ஜம் அடங்கப் போவதில்லை.....

நானும் ஒரு காதல் தீவிரவாதிதானடி
உன் இதயத்தை ஆக்கிரமித்து - அதில்
என் காதல் கொடியை நடும்வரை - என்
காதல் காகித செல்களால் உன் இதயவரைகளைத்
தாக்கிக் கொண்டே இருப்பேன்.....

நீ என் காதலுக்கு எத்தனை முறியடிப்புகள் தொடுத்தாலும்
நான் ஒரு துளிகூட அஞ்சப்போவதில்லை
நான் உன் இதயத்தை ஆக்கிரமிக்கும்
வரை தொடரும் என் காதல் சமர்.....

உன் அப்பா,அண்ணன் என்ற
அரணுக்குள் மறைந்தாலும் சரி
உன் உறவுகள் என்ற
பாதுகாப்பு நிலையங்களில் பதுங்கினாலும் சரி
என் சமர் தொடரும்.....

எத்தனை இழப்புகள் எனக்கு வந்தாலும்
என் காதல் தீவிரவாதம் தொடரும்- உன்
இதய நாட்டை நான் அடிமை கொள்ளும்வரை.......

No comments:

Post a Comment