Saturday, February 26, 2011

அவள் வருவாளா???

முகத்தில் பருக்களும்
உதட்டில் புன் முறுவலும்
வாலிப அரும்புமீசையும்
வானவில் ஆசையும்
கண்ணாடி முன் தலைகோதலும்
உன் பின்னாடி மனப்போக்கலும்
ஏன்? எதற்கு? எனக்கோர் கேள்வி என்னுள்ளே..???

உன்னைப் பார்த்த பின்புதான்
phenylalanine, dopamine & nor-epinephrine
எனக்குள்ளும் சுரப்பதையும்
என்னுள் ஒரு உத் வேகத்தையும்
உணர்ந்தேனடி ப்ரியசகி....

வாழ்க்கை என்றால் ஒரேயொரு மகிழ்ச்சிதான் உண்டு - அது
காதலிப்பதும் காதலிக்கப்படுவதும்தானடி லூசுபெண்ணே
ரோஜாவை மட்டுமல்லாமல்
மனங்களையும் பரிமாறி
விழிகளால் கதைபேசி
மௌனத்தை சுவாசிக்கும்
ஒவ்வொரு நாளும் காதலர்தினம்தான்......

ஆனால் மனதுக்குள் பட்டாம்பூச்சிகள்
கொத்துக்கொத்தாகப் பறக்கும் படபடப்புடனும்
காதல் மொழி ததும்பும் வாழ்த்து மடலுடனும்
அசத்தலான கிப்ட்டுடனும்
கிறங்கும் முத்தங்களையும் விஷ்தரிப்பதற்கு
இந்த பூலோகமே காத்திருக்கும் திருநாளது " feb14"

இத்தினத்தில் உன் வலண்டைன்
நானும் காத்திருக்கிறேன்
அஸ்டோரியஸ் உனக்காக
உன் தந்தை கிளாடியை விட்டு வருவாயா???
இல்லை ஏமாற்றம் தருவாயா???

No comments:

Post a Comment