Monday, June 4, 2012

நண்பனுக்காய் ஒரு கிறுக்கல் !!!


(பிரியமான நண்பன் பிரியந்தனுக்கு சிந்துவின் பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்)

நினைவுகளை நினைக்கையில்
நிழலாடும் நம் நட்பு
கனவுகளை நிஜமாக்க
கவிபாடும் நம் வார்த்தைகள்
உறவுகளை உணரவைக்க
உதிரம்கூட ஊற்றெடுக்கும்...

பிரார்த்தனையில் கிடைத்த ஆயிரத்தைவிட
பிராத்திக்காமல் கிடைத்த நண்பன் நீ
பிரமனின் படைப்புதனில்
பிரமிக்க வைத்த ஓர் உயிர் நீ
பிடிக்காத உறவுகளின் பின்னனியில் ஓர்
பிடித்த உறவாய் நீ...

உன் அமைதியான வார்த்தைகள்
நம் நட்புக்கோர் ஆணிவேர்
உன் உதட்டுவழி சிரிப்பு
நம் நட்புக்கோர் பக்கபலம்
உன் தொல்லைபேசி sorry தொலைபேசி அழைப்பு
நம் நட்புக்கோர் உறவுப்பாளம்
நேற்று நீ யாரோ ஆனால்
இன்றும் என்றும் என் அன்பு நண்பேண்டா !!!









பின் குறிப்பு : 


01. என் கவி வாசகர்களுக்கான அன்பான வேண்டுகோள் வெருமனே வாசிக்காமல் உங்கள் கருத்துக்களையும் பதிவுபன்னுங்கள். 

02. வாசகர்களுக்கான தயவான வேண்டுகோள் இந்த கிறுக்கள் பகுதியில் இணைந்து கொள்ள செய்யவேண்டியது. 
  • Join this site ஐ Click செய்க.
  • பின் உங்கள் Mail account ஐ தெரிவு செய்க. 
  • பின் உங்கள் மெயில் ID ஐ யும் password ஐயும் Type செய்து,
  • பின் done ஐ Click செய்யவும். 

1 comment: